Sunday 1 May 2011

எல்லோரும் தேடித்திரிந்திடும் அந்த
ஒருவன்
மலைகளையும் அவற்றின் அழகிய
சரிவுகளையும்

மலர்களையும் மழைமேகங்களையும்
கல்லையும் கானகத்துகுயிலையும்
காலங்களையும் அவற்றின் கோலங்களையும்
உன்னையும் என்னையும் படைத்ததாக சொல்லப்படும்
அந்த ஒருவன்...

அவளின் செவ்விதழ் மலர்ச்சியில்
வெளிப்படுவான் என்று
நான் நினைத்திருக்கவில்லை...

ஆம்! படைத்தவனும் படைப்புக்களும்
ஒன்றோடொன்று கூடிக்
களித்திருக்ககண்டேன் அந்தப்
புன்னகையில்...

No comments:

Post a Comment