Sunday 1 May 2011

எல்லோரும் தேடித்திரிந்திடும் அந்த
ஒருவன்
மலைகளையும் அவற்றின் அழகிய
சரிவுகளையும்

மலர்களையும் மழைமேகங்களையும்
கல்லையும் கானகத்துகுயிலையும்
காலங்களையும் அவற்றின் கோலங்களையும்
உன்னையும் என்னையும் படைத்ததாக சொல்லப்படும்
அந்த ஒருவன்...

அவளின் செவ்விதழ் மலர்ச்சியில்
வெளிப்படுவான் என்று
நான் நினைத்திருக்கவில்லை...

ஆம்! படைத்தவனும் படைப்புக்களும்
ஒன்றோடொன்று கூடிக்
களித்திருக்ககண்டேன் அந்தப்
புன்னகையில்...

Monday 25 April 2011

நமதிருமையில் பிறந்த நேசம் 
நமதிருமை அழித்து 
ஒருமை செய்கிறது.. 


இருமை உதிர்ந்து ஒருமை
மலர்ந்ததால் 
மொழிகள் கடந்து வாழ்வோம் இனி 


மௌனமாய்...
தூக்கம் கண்களை மறந்த இரவு 
கற்பனை தீயில் இடுகிறேன் 
வாழ்வினை தொட்டு விலகிய 
அந்த நிமிடங்களை...

நேசம் நிறைந்த நெஞ்சம் 
பரிவோடு அணைத்த கைகள் 
காதல் வழிந்த கண்கள் 
ஆசை எறிந்த தேகம்...
என இவ்வெவையும் புரியாமல் நின்றாய்
அல்லது புரிந்திருந்தும் உன்னுள்ளே புதைத்து விட்டாயோ?

இன்னும் ஒருமுறை உரைக்கிறேன் கேள்
எனது மௌனம் உனது முழுமையை 
தொடும் நாள் வரையில்.. 
காத்துகிடப்பேன் உன்னை நான் 
கண்ட அந்த நதிகரையில்...
அமைதி இழந்த நடுநிசிகளில் 
உயிரை பிழிந்து விடும் உணர்வுகள்.. 
வார்த்தைகளாய் வழிந்து நிரப்புகின்றன 
என் காகிதங்களின் வெறுமையை..

வெறும் வரிகளல்ல அவை என் வலிகள்...