எல்லோரும் தேடித்திரிந்திடும் அந்த
ஒருவன்
மலைகளையும் அவற்றின் அழகிய
சரிவுகளையும்
மலர்களையும் மழைமேகங்களையும்
கல்லையும் கானகத்துகுயிலையும்
காலங்களையும் அவற்றின் கோலங்களையும்
உன்னையும் என்னையும் படைத்ததாக சொல்லப்படும்
அந்த ஒருவன்...
அவளின் செவ்விதழ் மலர்ச்சியில்
வெளிப்படுவான் என்று
நான் நினைத்திருக்கவில்லை...
ஆம்! படைத்தவனும் படைப்புக்களும்
ஒன்றோடொன்று கூடிக்
களித்திருக்ககண்டேன் அந்தப்
புன்னகையில்...
ஒருவன்
மலைகளையும் அவற்றின் அழகிய
சரிவுகளையும்
மலர்களையும் மழைமேகங்களையும்
கல்லையும் கானகத்துகுயிலையும்
காலங்களையும் அவற்றின் கோலங்களையும்
உன்னையும் என்னையும் படைத்ததாக சொல்லப்படும்
அந்த ஒருவன்...
அவளின் செவ்விதழ் மலர்ச்சியில்
வெளிப்படுவான் என்று
நான் நினைத்திருக்கவில்லை...
ஆம்! படைத்தவனும் படைப்புக்களும்
ஒன்றோடொன்று கூடிக்
களித்திருக்ககண்டேன் அந்தப்
புன்னகையில்...