Monday 25 April 2011

தூக்கம் கண்களை மறந்த இரவு 
கற்பனை தீயில் இடுகிறேன் 
வாழ்வினை தொட்டு விலகிய 
அந்த நிமிடங்களை...

நேசம் நிறைந்த நெஞ்சம் 
பரிவோடு அணைத்த கைகள் 
காதல் வழிந்த கண்கள் 
ஆசை எறிந்த தேகம்...
என இவ்வெவையும் புரியாமல் நின்றாய்
அல்லது புரிந்திருந்தும் உன்னுள்ளே புதைத்து விட்டாயோ?

இன்னும் ஒருமுறை உரைக்கிறேன் கேள்
எனது மௌனம் உனது முழுமையை 
தொடும் நாள் வரையில்.. 
காத்துகிடப்பேன் உன்னை நான் 
கண்ட அந்த நதிகரையில்...

No comments:

Post a Comment